Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓரினச்சேர்க்கையின் போது ஏற்பட்ட தகராறு - கத்திகுத்து வாங்கிய வாலிபர்

Webdunia
திங்கள், 24 செப்டம்பர் 2018 (13:41 IST)
மகாராஷ்டிராவில் ஓரினச்சேர்க்கையில் ஏற்பட்ட தகராறால்  23 வயது இளைஞர் 46 வயது நபரை கத்தியால் குத்தியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ராஜேஷ் வர்தாக்(46) என்ற நபர் 23 வயது இளைஞர் ஒருவருடன் அவ்வப்போது ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
 
நாளுக்கு நாள் ராஜேஷின் அட்டூழியங்கள் அதிகரித்துக்கொண்டே போனது. எப்பொழுதும் ராஜேஷ் அந்த இளைஞரிடம் ஓரினச் சேர்க்கைக்கு வருமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் அந்த இளைஞர் பயங்கர கடுப்பில் இருந்துள்ளார்.
 
நேற்றும் வழக்கம்போல் ராஜேஷ் அந்த இளைஞரை ஓரினச் சேர்க்கைக்கு கூப்பிட்டுள்ளார். இதற்கு அந்த இளைஞன் மறுத்துள்ளான். ஆனாலும் கேட்காத ராஜேஷ் தொடர்ந்து நச்சரித்துள்ளார். 
 
இதில் கோபம் தலைக்கேறிய அந்த இளைஞர் ராஜேஷை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த ராஜேஷிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments