Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்குள் வளரும் கரு.. மருத்துவர்கள் ஆச்சரியம்..!

Mahendran
புதன், 29 ஜனவரி 2025 (14:13 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்குள் இன்னொரு கரு வளர்ந்து வருவதாக மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புல்தானா என்ற மாவட்டத்தில் 35 வயது கர்ப்பிணி ஒருவர் சோதனைக்காக வந்திருந்தார். அப்போது  அவரை சோனாகிராபி மூலம் சோதனை செய்து பார்த்தபோது அவரது வயிற்றுக்குள் உண்டாகிய குழந்தையின் உடலுக்குள் இன்னொரு கரு உருவாகி இருப்பதாகவும் அது முழு வளர்ச்சியடையாத நிலையில் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.
 
 இதுபோன்ற அரிய நிகழ்வு ஐந்து லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே நிகழும் என்றும் இதுவரை உலக அளவில் 200 பேருக்கு மட்டுமே இந்த நிலை உருவாகியுள்ளது என்றும் தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் குழந்தை பின்னர் தான் குழந்தையின் வயிற்றில் இருக்கும் கருவை என்ன செய்வது என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றும் எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கும் தாய்க்கு முதலில் பிரசவம் பார்த்தவுடன் இது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் மருத்துவ வட்டாரங்களில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments