Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயநாட்டில் தோல்வி பயம்.! ரேபரேலியில் போட்டி.! ராகுல் காந்தியை விமர்சித்த பிரதமர் மோடி..!

Senthil Velan
வெள்ளி, 3 மே 2024 (12:55 IST)
மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டால் தோற்றுவிடுவோம் என்ற பயத்தால் ரேபரேலியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
 
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரேபரேலி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது.
 
மேற்கு வங்கத்தில்  பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வயநாட்டில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தால் ராகுல் காந்தி போட்டியிட வேறு தொகுதியைத் தேடிக் கொண்டிருக்கிறார் நான் ஏற்கெனவே சொல்லியிருந்தேன் எனக் கூறியுள்ளார். தற்போது அமேதி தொகுதியை விட்டுவிட்டு ரேபரேலியை அவர் தேர்வு செய்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ALSO READ: கர்ப்பிணி பெண் பலி.! வேலை செய்யாத அபாய சங்கிலி.! ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவு.!!
 
இவர்கள்தான் ஊர் ஊராகச் சென்று அஞ்சாதீர்கள் எனப் பிரச்சாரம் செய்பவர்கள் என்றும் நான் அவர்களுக்கு அதையே திருப்பிச் சொல்கிறேன் என்றும் அச்சப்பட்டு ஓடாதீர்கள் என்றும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments