Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகள் திருமணமான 4வது நாளில் தந்தை தூக்கு போட்டு தற்கொலை!

Webdunia
திங்கள், 28 நவம்பர் 2022 (18:17 IST)
மகள் திருமணம் ஆன நான்காவது நாளில் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மில் தொழிலாளி சுனில் திவிவேதி என்பவர் தனது நான்காவது மகளுக்கு திருமணம் செய்து வைத்த 4வது நாளில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
 
ஏற்கனவே அவர் மூன்று மகள்களுக்கு திருமணம் செய்த வகையில் கடன் இருந்த நிலையில் நான்காவது மகளுக்கும் கடன் வாங்கி திருமணம் செய்ததாக தெரிகிறது.
 
இந்த நிலையில் கடன் தொல்லை அதிகமானதால் அவர் நேற்று திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். நான்கு மகள்களின் திருமணத்திற்கு வாங்கிய கடனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 
 
இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் மறைந்த சுனிலுக்கு ஐந்தாவதாக ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி - ஸ்ரீநகர் விமான விபத்து.. பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த விமானி கோரிக்கை விடுத்தாரா?

குடியிருப்பில் விழுந்த விமானம்.. 15 வீடுகள் சேதம்.. உயிரிழப்பு அதிகம் என அச்சம்..!

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments