நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து வரும் நிலையில், இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் விவசாயம் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து வருகின்றது.
இந்நிலையில், இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், நாட்டில் விவசாயிகளின் தற்கொலையை தடுப்பதற்கு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வழிகாட்ட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விரைவில் இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.