Webdunia - Bharat's app for daily news and videos

Install App

36 நாட்கள் நடந்தும் விவசாயிகள் போராட்டம் கண்டுகொள்ளப்படாதது ஏன்?

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2017 (21:40 IST)
தலைநகர் டெல்லியில் கடந்த 36 நாட்களாக நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் கொஞ்சம் கொஞ்சமாக பிசுபிசுத்து வருவதால் போராட்டத்தை தொடரலாமா? வேண்டாமா? என்பது குறித்து அய்யாக்கண்ணு ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.



 


விவசாய கடன் தள்ளுபடி , காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகளை மத்திய அரசுக்கு உணரும் வகையில் போராட்டம் நடத்தாமல் தினமும் ஒருவகை வித்தியாசமான போராட்டம் என்ற பெயரில் அடித்த கூத்தாகவே டெல்லியில் உள்ளவர்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

பிரதமர் தங்களை அழைத்து பேச வேண்டும் என்ற கோரிக்கை வைத்துவிட்டு பிரதமர் போன்று வேஷம் அணிந்து சாட்டையால் அடிக்கும் போராட்டத்தை மத்திய அரசு ரசிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. மேலும் இந்த போராட்டத்தை மத்திய அரசின் கவனத்திற்கு தமிழக அரசு, தமிழக எம்பிக்கள் கொண்டு செல்ல தவறிவிட்டதாலும் முக்கியத்துவம் பெறவில்லை.

அதுமட்டுமின்றி தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அரசியல் பரபரப்புகளே அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக வருவதால் விவசாயிகள் போராட்டத்தை ஊடகங்களும் சில நாட்களாக கண்டுகொள்ளவில்லை. மாணவர்கள் மற்றும் இளைஞர்களும் இந்த போராட்டத்தை பெரிய அளவில் சீரியஸாக எடுத்து கொள்ளாததால் விரைவில் போராட்டம் தோல்வியில் முடியும் என்றே கருதப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

படி படி என்று சொன்னதால் தந்தை தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்.. நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments