Webdunia - Bharat's app for daily news and videos

Install App

36 நாட்கள் நடந்தும் விவசாயிகள் போராட்டம் கண்டுகொள்ளப்படாதது ஏன்?

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2017 (21:40 IST)
தலைநகர் டெல்லியில் கடந்த 36 நாட்களாக நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் கொஞ்சம் கொஞ்சமாக பிசுபிசுத்து வருவதால் போராட்டத்தை தொடரலாமா? வேண்டாமா? என்பது குறித்து அய்யாக்கண்ணு ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.



 


விவசாய கடன் தள்ளுபடி , காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகளை மத்திய அரசுக்கு உணரும் வகையில் போராட்டம் நடத்தாமல் தினமும் ஒருவகை வித்தியாசமான போராட்டம் என்ற பெயரில் அடித்த கூத்தாகவே டெல்லியில் உள்ளவர்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

பிரதமர் தங்களை அழைத்து பேச வேண்டும் என்ற கோரிக்கை வைத்துவிட்டு பிரதமர் போன்று வேஷம் அணிந்து சாட்டையால் அடிக்கும் போராட்டத்தை மத்திய அரசு ரசிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. மேலும் இந்த போராட்டத்தை மத்திய அரசின் கவனத்திற்கு தமிழக அரசு, தமிழக எம்பிக்கள் கொண்டு செல்ல தவறிவிட்டதாலும் முக்கியத்துவம் பெறவில்லை.

அதுமட்டுமின்றி தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அரசியல் பரபரப்புகளே அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக வருவதால் விவசாயிகள் போராட்டத்தை ஊடகங்களும் சில நாட்களாக கண்டுகொள்ளவில்லை. மாணவர்கள் மற்றும் இளைஞர்களும் இந்த போராட்டத்தை பெரிய அளவில் சீரியஸாக எடுத்து கொள்ளாததால் விரைவில் போராட்டம் தோல்வியில் முடியும் என்றே கருதப்படுகிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments