Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரும்பு பெட்டியில் வைத்திருந்த ரூ.5 லட்சத்தை அரித்த கரையான்: விவசாயி அதிர்ச்சி

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (10:35 IST)
இரும்பு பெட்டியில் வைத்திருந்த ரூ.5 லட்சத்தை அரித்த கரையான்:
ஆந்திராவில் விவசாயி ஒருவர் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த ரூபாய் ஐந்து லட்சத்தை கரையான் அரித்து விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஆந்திராவின் உள்ள கிருஷ்ணா மாவட்டம் என்ற பகுதியைச் சேர்ந்த விவசாயி ஜமாலியா இவர் வங்கி கணக்கு எதுவும் இல்லாததால் தனது வீட்டிலேயே சேமிப்பு பணத்தை இரும்பு பெட்டி ஒன்றில் வைத்து பாதுகாத்து வந்தார் 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர் பணத்தை இரும்பு பெட்டியை திறந்து பார்க்கவில்லை. இதனை அடுத்து சமீபத்தில் அவர் இரும்பு பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் ஐந்து லட்சம் ரூபாய் நோட்டுகளையும் கரையான்கள் அரித்துவிட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் 
 
சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவுடன் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்திருந்த பணம் முழுவதையும் கரையான் அரித்து விட்டதால் வேதனையின் உச்சத்தில் உள்ளார். இதுகுறித்து ஆந்திர அரசு அவருக்கு இந்த பணத்திற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ளவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோம் மருத்துவமனையில் போப்பாண்டவர் அனுமதி.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கிளாம்பாக்கம் வரை 13 மெட்ரோ ரயில் நிலையங்கள்.. திட்ட அறிக்கை தயார்..!

திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் ஏன் பேரணி? ஐகோர்ட் கண்டனம்..!

பாம்பன் ரயில் பாலம் இயக்கப்படுவது எப்போது? தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வாட்ஸ் அப் செயலியுடன் இன்ஸ்டாகிராம் இணைப்பு.. விரைவில் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments