Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யானை தாக்கி விவசாயி உயிர் பிழைத்த அதிசயம் [வீடியோ]

யானை தாக்கி விவசாயி உயிர் பிழைத்த அதிசயம் [வீடியோ]
, சனி, 18 ஏப்ரல் 2015 (18:34 IST)
மேற்கு வங்கத்தில் யானையால் தாக்கப்பட்ட விவசாயி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
 
கடந்த வியாழனன்று மேற்கு வங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மூன்று யானைகள் புகுந்தன. அந்த யானைகளை கிராம மக்கள் விரட்ட முயன்றனர். இதனால் அந்த மூன்று யானைகளும் அங்குள்ள வயலுக்குள் நுழைந்தன.
 

 
அப்போது கூட்டத்திலுள்ள ஒரு யானை வயலில் நின்று கொண்டிருந்த விவசாயி ஒருவரை முட்டித் தள்ளியது. அவ்வாறு இரண்டு முறை முட்டி தள்ளியது. இதில் உடல் முழுவதும் சேற்றில் நனைந்தபடி தப்பித்து வெளியே வந்தார். அப்போது சுற்றி நின்றவர்கள் அவரை பார்ந்து சந்தோஷமாக சிரித்தனர்.

வீடியோ கீழே:
 

Share this Story:

Follow Webdunia tamil