Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கழிவறையை சமையலறையாக மாற்றிய குடும்பத்தினர்..

Arun Prasath
சனி, 18 ஜனவரி 2020 (18:17 IST)
உத்தர பிரதேசத்தில் பொதுக் கழிவறையை ஒரு குடும்பத்தினர் சமையல் அறையாக பயன்படுத்தி வருகின்றனர்.

உத்தர பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் உள்ள அகன்பூர் என்ற கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்திற்காக கட்டப்பட்ட்ட பொதுக் கழிவறையை ராம் பிரகாஷ் என்பவரின் குடும்பத்தினர் சமையல் அறையாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

இது குறித்து ராம் பிரகாஷ், ”எங்களுக்கு முறையான வீடு ஒதுக்கப்படவில்லை. ஆதலால் ஒரு வருடமாக பொதுக் கழிப்பறையை சமயலறையாக பயன்படுத்தி வருகிறோம்” என கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து பாரபங்கி மாவட்ட நீதிபதி டாக்டர் ஆதர்ஷ் சிங், “வீட்டு வசதி வேண்டி எந்த தகவலும் வரவில்லை, பிரகாஷ் விண்ணப்பித்தால் அவருக்கு தங்கும் இடவசதி வழங்கப்படும். ஆனால் அவருக்கு எதிராக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments