Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனைவியின் செக்ஸ் டார்ச்சர் புகாரால் குழந்தைகளின் கழுத்தை அறுத்த கொடூர தந்தை

மனைவி செக்ஸ் டார்ச்சர் புகாரால் குழந்தைகளின் கழுத்தை அறுத்த கொடூர தந்தை கைது

மனைவியின் செக்ஸ் டார்ச்சர் புகாரால் குழந்தைகளின் கழுத்தை அறுத்த கொடூர தந்தை
, செவ்வாய், 23 பிப்ரவரி 2016 (17:14 IST)
கேரளா, பாலக்காடு காவல்நிலையத்தில் மனைவி செக்ஸ் டார்ச்சர் புகார் செய்ததால் ஆத்திரமடைந்து தன்னுடைய 2 குழந்தைகளின் கழுத்தை அறுத்த கொடூர தந்தை கைது.
 

 


கேரளா மாநிலம் பாலக்காடு கல்பாத்தி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அய்யப்பன் மீது மனைவி சுமா, சில நாட்களுக்கு முன்பு பாலக்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகரில், என் கணவர் என்னுடைய விருப்பம் இல்லாமல் அடிக்கடி செக்ஸ் டார்ச்சர் செய்து வருகிறார். இதனால், அவருடன் வாழ விருப்பம் இல்லை என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
 
சில நாட்களாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுடைய குழந்தைகளான ஆதித்தியன் மற்றும் அர்ச்சனா என்ற மகளும் தாய் வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள். 
 
இந்நிலையில், நேற்று பள்ளி சென்று 2 குழந்தைகளையும் தந்தை ஆட்டோவில் அழைத்துசென்றுள்ளார். சிறிது தூரம் சென்ற பின்னர், புதர்மறைவு அருகே அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மகன் ஆதித்தியாவின் கழுத்தை அறுத்தார். இதில் அந்த சிறுவனின் தலையில் இருந்து ரத்தம் பீறியிட்டு அதிகமான ரத்தம் வெளியேறியது.

இதைப்பார்த்த, மகள் அர்ச்சனா அலறி அடித்து கூச்சல் போட்டார், இதையடுத்து, மகள் கழுத்தையும் அறுத்து முள்புதரில் வீசினார். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதைறிந்த அவர் அங்கிருந்து தப்பித்துவிட்டார்
 
குழந்தைகள் 2 பேரும் ரத்தவெள்ளத்தில் மயங்கி கிடந்தை பார்த்து பாலக்காடு ஹேமாம்பிகை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
 
அவர்கள் விரைந்து வந்து குழந்தைகளை மீட்டு திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். தற்போது, அந்த குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தைகளின் தந்தையை தேடி வந்தனர்.

இதையடுத்து, நேற்று இரவு அய்யப்பனை போலீசார் கைது செய்தனர், பின்னர், அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், " காவல் நிலையத்தில் என் மீது மனைவி கற்பழிப்பு புகார் அளித்தார். இதனால், ஆத்திரம் அடைந்து என்னுடைய குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்ய திட்டமிட்டேன். என்று கூறினார். 

Share this Story:

Follow Webdunia tamil