Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் இந்தியா வருகை

பேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் இந்தியா வருகை
, சனி, 17 அக்டோபர் 2015 (00:29 IST)
பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க்  இந்தியா வருகிறார்.
 

 
பிரபல சமூகவலைதளம் ஃபேஸ்புக். உலகம் முழுதும் இதற்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 1.30 லட்சமாக உள்ளது. இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் அக்டோபர் 28ஆம் தேதி இந்தியா வருகிறார்.
 
டெல்லியில் உள்ள டவுன் ஹாலில் நடைபெற உள்ள ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். மேலும்  ஐ.ஐ.டி. மாணவர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றார். அப்போது, பேஸ்புக் பயன்பாடு மற்றும் அதில் நவீன தன்மமை குறித்து எடுத்துரைப்பார் என கூறப்படுகிறது.
 
மேலும், பிரதர் மோடியை, ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் சந்தித்து பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil