Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேதகு என்ற அடைமொழியை யாரும் பயன்படுத்த வேண்டாம்: கேரள ஆளுநர் சதாசிவம்

Webdunia
வியாழன், 18 செப்டம்பர் 2014 (08:52 IST)
மேதகு என்பது உள்ளிட்ட வேறு எந்தவிதமான அடைமொழியையும் பயன்படுத்தி தன்னைக் குறிப்பிட வேண்டாம் என்று கேரள ஆளுநர் சதாசிவம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சதாசிவம் கேரள மாநில ஆளுநராக சமீபத்தில் பதவியேற்றுக்கொண்டார்.

இந்தநிலையில் திருவனந்தபுரம் ஆளுநதர் மாளிகை சார்பில் ஒரு செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

“தன்னுடனான கடிதப் போக்குவரத்து உட்பட அனைத்து தொடர்புகளின்போதும் மதிப்புக்குரிய கேரள ஆளுநர் என்ற வார்த்தையை மட்டும் பயன்படுத்தினால் போதுமானது.

மேதகு என்பது உள்ளிட்ட வேறு எந்தவிதமான அடைமொழியையும் பயன்படுத்தி தன்னைக் குறிப்பிட வேண்டாம் என்று ஆளுநர் விரும்புகிறார்“ இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments