மேதகு என்பது உள்ளிட்ட வேறு எந்தவிதமான அடைமொழியையும் பயன்படுத்தி தன்னைக் குறிப்பிட வேண்டாம் என்று கேரள ஆளுநர் சதாசிவம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சதாசிவம் கேரள மாநில ஆளுநராக சமீபத்தில் பதவியேற்றுக்கொண்டார்.
இந்தநிலையில் திருவனந்தபுரம் ஆளுநதர் மாளிகை சார்பில் ஒரு செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
“தன்னுடனான கடிதப் போக்குவரத்து உட்பட அனைத்து தொடர்புகளின்போதும் மதிப்புக்குரிய கேரள ஆளுநர் என்ற வார்த்தையை மட்டும் பயன்படுத்தினால் போதுமானது.
மேதகு என்பது உள்ளிட்ட வேறு எந்தவிதமான அடைமொழியையும் பயன்படுத்தி தன்னைக் குறிப்பிட வேண்டாம் என்று ஆளுநர் விரும்புகிறார்“ இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.