Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் பிரதமர் மகள்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு வாபஸ்

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2015 (18:23 IST)
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மகள்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்புப் பாதுகாப்பு படை வாபஸ் பெறப்படுகிறது.
 

 
பிரதமர், முன்னாள் பிரதமர், முன்னாள் பிரதமர்களின் குடும்பத்துக்கு சிறப்பு படை பாதுகாப்பு (எஸ்பிஜி) அளிக்கப்படுகிறது. அந்த வகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவரது குடும்பத்துக்கு சிறப்பு படை பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் தனக்கு அளிக்கப்பட்டு வரும் சிறப்புப் படை பாதுகாப்பு தேவையில்லை என்று மன்மோகன் சிங்கின் மகளும், எழுத்தாளருமான தாமன் சிங் கடந்த மாதம் அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
 
இதேபோல் மற்றொரு மகளும், தில்லி பல்கலைக்கழக பேராசிரியருமான உபேந்திர சிங் இப்போது தனக்கு அளிக்கப்பட்ட சிறப்பு படை பாதுகாப்பை விலக்கி கொள்ளுமாறு கடிதம் எழுதி இருக்கிறார்.
 
இதையடுத்து முன்னாள் பிரதமர் மகள்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு படை பாதுகாப்பு விலக்கி கொள்ளப்படுகிறது. இதை உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார்.

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

Show comments