Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பீகார் முதலமைச்சராக பதவி வகித்தவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் 8 அரசு பணியாளர்கள்

பீகார் முதலமைச்சராக பதவி வகித்தவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் 8 அரசு பணியாளர்கள்
, புதன், 2 ஜூலை 2014 (10:14 IST)
பீகாரில் முன்னாள் முதலமைச்சர்களுக்கு வாழ்நாள் முழுவதும் 8 அரசு பணியாளர்களை பணியில் அமர்த்த பீகார் அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்களாக பதவி வகித்தவர்களின் ஆயுட்காலம் வரை அவர்கள் அனைவருக்கும் தலா ஒரு நேர்முக உதவியாளர், 2 குமாஸ்தாக்கள், ஒரு கார் டிரைவர் மற்றும் பிற உதவிக்காக 4 பணியாளர்களை அரசு ஊதியத்தில் வைத்துக் கொள்ள பீகார் மாநில அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன்படி, தற்போதைய முதலமைச்சர் நிதிஷ் குமார், முன்னாள் முதலமைச்சர்கள் லல்லு பிரசாத் யாதவ், அவரது மனைவி ரப்ரி தேவி ஆகியோர் பயனடைவார்கள்.

இதேபோல், தற்போதைய அமைச்சர்களின் தினப்படி மற்றும் இதர செலவுகளுக்கான படி தொகையை உயர்த்தவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil