Webdunia - Bharat's app for daily news and videos

Install App

17 வயது மைனர் பெண்ணை திருமணம் செய்த இளைஞர் மீது பாய்ந்த போக்ஸோ சட்டம்

Webdunia
ஞாயிறு, 29 ஏப்ரல் 2018 (13:55 IST)
சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் மீது போக்ஸோ என்ற சட்டம் பாயும் என சமீபத்தில் சட்டம் இயற்றப்பட்ட நிலையில் ஈரோடு அருகே ஏற்கனவே திருமணமான இளைஞர் ஒருவர் 17 வயது மைனர் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ததாக போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
 
கடந்த 10 மாதங்களுக்கு முன் ஈரோடு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஆனந்த்ராஜ் என்பவருக்கு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான ஒருசில மாதத்தில் மனைவியை பிரிந்துவிட்ட ஆனந்த்ராஜ், பின்னர் தனது வீடு அருகே உள்ள 17 வயது மைனர் பெண்ணை ஏமாற்றி அவருடன் ஊரைவிட்டு ஓடிப்போனார்.
 
இந்த நிலையில் மைனர் பெண்ணுடன் ஆந்திராவில் ஆனந்த்ராஜ் குடியிருப்பதை அறிந்த போலீசார் அவரை கைது செய்து மைனர் பெண்ணையும் மீட்டனர். அவர் மீது போக்ஸோ சட்டத்தின் படி வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆனந்த்ராஜூக்கு உதவிய முருகன் என்பவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்