Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எர்ணாகுளம் - தாம்பரம் ஆரியங்காவில் நிறுத்தப்படும்: ரயில்வே அறிவிப்பால் சபரிமலை பக்தர்கள் மகிழ்ச்சி

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (15:36 IST)
எர்ணாகுளம் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் இனிமேல் ஆரியங்காவு ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது. 
 
எர்ணாகுளம் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் எர்ணாகுளத்தில் திங்கள்கிழமை மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு, நியூ ஆரியங்காவுக்கு மாலை 6.45 மணிக்கும், ஆரியங்காவு ஹால்ட்டுக்கு மாலை 6.51 மணிக்கும் சென்றடையும். அதேபோல் ஆரியங்காவில் இருந்து புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12 மணிக்கு தாம்பரத்துக்கு வந்து சேரும். 
 
மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு, ஆரியங்காவு ஹால்ட்டை மறுநாள் அதிகாலை 5.01 மணிக்கும், நியூ ஆரியங்காவு நிலையத்தை அதிகாலை 5.07 மணிக்கும் அடையும். அன்றையநாள் நண்பகல் 12.30 மணிக்கு எர்ணாகுளத்தை அடையும். 
 
இந்த நிலையில் எர்ணாகுளம் தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் சபரிமலை பக்தர்களின் வசதிக்காக ஆரியங்காவு ரயில் நிலையத்தில் நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் சபரிமலை பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments