Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் இருந்து 282 பேருடன் துபாய் சென்ற விமானத்தில் தீ [வீடியோ]

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (03:53 IST)
282 பயணிகளுடன் இந்தியாவின் திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் சென்ற விமானம் தரையிறங்கும் போது ஓடுதளத்தில் விபத்துக்குள்ளானது.
 

 
துபாய் நாட்டின் பயணிகள் விமானமான EK521 என்ற விமானம் திருவனந்தபுரத்தில் இருந்து துபாய்க்கு சென்றது. அந்த விமானத்தில் 275 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் என மொத்தம் 282 பேர் பயணித்தனர். 
 
அந்த விமானம், துபாய் விமான நிலைய ஓடுதளத்தில் தரையிறங்கியபோது, முன்பக்க சக்கரம் உடைந்ததால் நிலை தடுமாறி, விமானத்தின் வால் பகுதி முதலில் தரையை தட்டியது.
 
இதனால், அதன் வலது பக்க என்ஜின் ஓடுதளத்தில் மோதி தீப்பிடித்தது. இதனால், அப்பகுதி எங்கும் புகை மண்டலம் சூழ்ந்தது. உடனடியாக பயணிகள் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால், பயணிகளின் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

வீடியோ இங்கே:
 

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments