Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் மின்சார பேருந்து சேவை தொடக்கம்

Webdunia
சனி, 11 நவம்பர் 2017 (13:02 IST)
முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் 6 பஸ் பேருந்து சேவை மும்பையில் தொடங்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தின் கோல்டுஸ்டோன் குரூப் மற்றும் சீனாவின் பி.ஒய்.டி வாகன தயாரிப்பு நிறுவனம் இணைந்து 6 இ-பஸ் கே7 மின்சார ரக  பேருந்துகளை மும்பை நகரத்திற்கு வழங்கியுள்ளது.

 
இந்தியாவில் தற்போது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடு  விதித்துள்ளது. எதிர்காலத்தில் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்கள் மட்டுமே விறக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. இதையொட்டி மும்பை மாநகராட்சி நிர்வாகத்தால் நடத்தப்படும் பெஸ்ட் குழுமம் மின்சார பஸ் சேவையை தொடங்கி உள்ளது.
 
நேற்று இந்த பஸ்களின் சேவை வடலா பணிமனையில் துவக்கி வைக்கப்பட்டது. இதனை மும்பை மேயர் விஸ்வநாத்  மகாதேஷ்வர் முன்னிலையில் யுவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே சேவையை துவக்கி வைத்தார். அந்த பேருந்தில் ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 200கி.மீ வரை இந்த மின்சார பேருந்துகளால் செல்ல முடியும் என அதை தயாரித்த நிறுவனம்  தகவல் தெரிவித்துள்ளது. சாலைகளில் அதிகபட்சமாக 70 கி.மீ வேகத்தில் இந்த பேருந்துகளை இயக்க முடியும் என  தெரிவித்துள்ளனர். 
 
பேருந்தில் பயணம் செய்வோருக்கு இந்த மின்சார பஸ்கள் மிகுந்த சவுகரியத்தையும் புதிய அனுபவத்தையும் அளிக்கும் என  பயணிகள் கூறி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி மாநில பட்ஜெட்.. பெண்கள் பாதுகாப்புக்கு மட்டும் ரூ.5100 கோடி ஒதுக்கீடு..!

1 மணி நேரத்தில் 8 இடங்களில் நகைப்பறிப்பு! விமான நிலையத்தில் கொள்ளையர்களை பிடித்த போலீஸ்!

இந்தியாவும் சீனாவும் தேர்தலில் தலையிடலாம்: கனடா உளவுத்துறை எச்சரிக்கை..!

சிவசேனாவின் உண்மை முகத்தை பாக்கப்போற நீ..! - குணால் கம்ராவுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

டாஸ்மாக் முறைகேடு வழக்கு; ஐகோர்ட் நீதிபதிகள் திடீர் விலகல்! பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments