Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு! – தேர்தல் கட்டுப்பாட்டுக்கு தயாராகும் மாநிலங்கள்!

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2021 (12:15 IST)
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி இந்த வார இறுதியில் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி இறுதி செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.

இதற்காக இன்று டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தலைமையில் ஆலோசனை கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் நடைபெறும் தேதி குறித்து இந்த வார இறுதியில் அறிவிக்கப்படலாம் என பேசிக்கொள்ளப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் தேர்தல் மாநிலங்களில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்பதால் திட்டப்பணிகளை மாநில அரசுகள் துரிதமாக செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments