Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் விதிமுறைகள் மீறல்.. மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு..!

Mahendran
வியாழன், 25 ஏப்ரல் 2024 (13:24 IST)
தேர்தல் விதிமுறைகளை மீறியதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆகிய இருவரிடமும் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதாக காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் பிரிவினை குறித்து பேசியதாக பாரதிய ஜனதாவும் மாறி மாறி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளன 
 
இந்த புகாரின் அடிப்படையில் ஏப்ரல் 29ஆம் தேதி காலை 11 மணிக்குள் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகிய இருவரும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது 
 
பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவருக்கும் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  தலைவர்களின் பேச்சு கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்பதால் தேர்தல் பிரச்சாரத்தின் போது மிகுந்த கவனமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments