Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் நேரத்தை மாற்ற முடியாது – தேர்தல் ஆணையம் அதிரடி !

Webdunia
திங்கள், 6 மே 2019 (15:34 IST)
தேர்தல் நேரத்தை அதிகாலையிலேயே தொடங்க சொல்லி தொடரப்பட்ட மனுவில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் நான்கு  கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள 3 கட்ட தேர்தல் மே 21 ஆம் தேதி வரை நடக்க இருக்கின்றன. இந்நிலையில் ரமலான் மாதம் மே 5 ஆம் தேதி தொடங்க இருப்பதால் இஸ்லாமியர்கள் அதிகமுள்ள பகுதிகளில் தேர்தல் நடந்தால் நோன்புகள் பாதிக்கப்படும் என சர்ச்சை எழுந்தது. அதையடுத்து நோன்பு நேரத்தில் இஸ்லாமியர்கள் வெளியில் செல்ல மாட்டார்கள் என்பதால் தேர்தல் நேரத்தை அதிகாலை 5 மணிமுதலே அரம்பிக்க வேண்டுமென  நிஜாமுதின் பாஷா என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை ஏற்று விசாரித்த உச்ச்நீதிமன்றம் இது குறித்து பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இது சம்மந்தமாகத் தேர்தல் ஆணையம் இன்று பதில் அளித்துள்ளது. அதில் ‘ தேர்தலை காலையிலேயே தொடங்கினால் முகவர்கள் இன்னும் சீக்கிரமே வாக்குச்சாவடிக்கு வரவேண்டும். அதனால் அது சாத்தியமில்லாதது’ எனெத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments