Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகரில் வாக்கு சீட்டு முறை:தேர்தல் ஆணையம் முடிவு என்ன?

Webdunia
சனி, 25 மார்ச் 2017 (11:56 IST)
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மொத்தம் 127 பேர் போட்டியிட மனு தாக்கல் செய்தனர். இதில் 82 பேருடைய வேட்பு மனுக்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது. வரும் 27ம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி தேதி என்பதால் அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.


 

பொதுவாக மின்னணு வாக்கு எந்திரத்தில் 16 வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்களை மட்டுமே சேர்க்க முடியும். மொத்தம் 64 வேட்பாளர்கள் பெயர்கள் சின்னம் அடங்கிய 4 மின்னணு இயந்திரங்கள் வரை பயன்படுத்தலாம். ஆனால் ஆர்.கே.நகர் தொகுதியில் 82 பேர் போட்டியிடுகிறார்கள். எனவே ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்கு சீட்டு முறையே பயன்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் வருகிற 27ம் தேதிக்குள் 18 பேர் வரை வாபஸ் பெற்றால் மின்னணு இயந்திரம் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே இரவில் நான்கு கோவில்கள் உண்டியல் உடைப்பு- பல ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

காட்டு யானை ரேஷேன் கடை கட்டிடத்தை உடைத்து கதவுகளை நொறுக்கி அட்டகாசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments