Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிசல்ட்டே வரலை.. அதுக்குள்ள கொண்டாட்டம்! – நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (13:30 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில் முடிவுகளுக்கு முன் கொண்டாட்டத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் நடந்து வரும் நிலையில் பெரும்பான்மையான இடங்களில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்னரே 5 மாநிலங்களின் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சியினர் தங்கள் வேட்பாளர் வெற்றி பெற்றதாக கொண்டாடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாகவே வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments