Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக சந்தீப் சக்சேனா நியமனம்: அரசாணை வெளியீடு

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2015 (07:26 IST)
இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக சந்தீப் சக்சேனா நியமனம் குறித்த தகவல், மத்திய அரசின் பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறையின் இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது.


 

 
அந்த அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-
 
மத்திய இணைச் செயலாளர்களின் நியமனத்தை மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு அங்கீகரித்துள்ளது.
 
அதன்படி, மத்திய அரசின் இணைச் செயலாளர் அந்தஸ்தில், இருந்த சந்தீப் சக்சேனா இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக நியமிக்கப்படுகிறார்.
 
அவர் பதவி ஏற்ற நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்கோ அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கும் வரையிலோ, இதில் எது முதலாவதாக நிகழ்கிறதோ அதுவரை இந்தப் பதவியில் சந்தீப் சக்சேனா நீடிப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
சந்தீப் சக்சேனா தமிழகத்தின் தலைமைத்தேர்தல் அதிகாரியாக 27-10-14 அன்று பதவி ஏற்றார்.

இந்நிலையில் அவருக்கு பதவி உயர்வு அளிக்கும் வகையில் அவரை இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக நியமித்து அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments