Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கீடு

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (22:38 IST)
மஹாராஸ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு பாலாசாகேபஞ்ச்சி சிவசேனா என்ற பெயர் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில்  அக்கட்சிக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கியுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலத்தில், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே மறும் சிவசேனா அதிருப்திக் குழு தலைவர் ஷிண்டே ஆகியோர் தலைமையில் 2 பிரிவாக உள்ளது.

இந்த நிலையில், அடுத்த மாதம் 3 ஆம் தேதி அந்தேரி கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவுள்ளது. இத்தொகுதியில், உத்தவ் தாக்கரே அணி சார்பில் மறைந்த எம்.எல்.ஏ ரமேஷ் லட்கேவின் மனைவி போட்டியிடுகிறார்.

இந்த  நிலையில், உத்தவ் தாக்கரேவுக்கு வில், அம்பு சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்று ஷிண்டே தேர்தல் ஆணையத்திடம் கூறிய நிலையில், இரு தரப்பினரும் வேறறு பெயர் மற்றும் சின்னத்துடன் போட்டியிடும்படி கூறியது.

இந்த நிலையில் ஷிண்டே அணிக்கு பாலாசாகேபஞ்சி சிவசேனா என்ற பெயருடன் இரட்டை வாள் – கேடயம் சின்னத்தை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

திடீரென சாலையின் நடுவில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. வாகனங்கள் சேதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments