Webdunia - Bharat's app for daily news and videos

Install App

58 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் இன்று நிறைவு..! தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு..!!

Senthil Velan
வியாழன், 23 மே 2024 (13:32 IST)
58 தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
 
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், முதல்கட்டத்தில் 66.14 சதவீதம், 2வது கட்டத்தில் 66.71 சதவீதம், 3வது கட்டத்தில் 65.68 சதவீதம், 4-ம் கட்டத்தில் 69.16 சதவீதம், 5-ம் கட்டத்தில் 60.09 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதுவரை 428 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
 
இந்த நிலையில், ஆறாம் கட்டமாக 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 58 தொகுதிகளில் மே 25- ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை  6 மணியுடன் நிறைவடைகிறது.

ALSO READ: ஜெயக்குமார் கொலை வழக்கு.! தனிப்படை போலீசார் திணறல்..! சிபிசிஐடிக்கு மாற்றம்...!!

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments