Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன்.. என்ன காரணம்?

Mahendran
வியாழன், 3 அக்டோபர் 2024 (16:22 IST)
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அசாருதீன் மீது அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்துடன் தொடர்பான முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் 20 கோடி ரூபாய் நிதியை முறைகேடாக அசாருதீன் கையாண்டதாக தெலுங்கானா ஊழல் தடுப்பு பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்ட நிலையில் தற்போது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

61 வயதான அசாருதீன் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ஆக இருந்தவர். அவர் மீது தற்போது ஹைதராபாத் கிரிக்கெட் சங்க பண மோசடி வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அசாருதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில், அவர் ஆஜராகி என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார் என்பதை பொறுத்து பார்க்க வேண்டும்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெரும் சேதம்: ஆற்றில் உள்ள சிவன் சிலை மூழ்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு..!

மழையில் நனைந்து கொண்டு செல்போன் பேசலாமா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சீதை பிறந்த நகரின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.887 கோடி. முதல்வர் நிதிஷ்குமார் ஒப்புதல்..!

வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டம்.. ஈபிஎஸ் வீட்டுக்கும் செல்வாரா முதல்வர்? அவரே கூறிய பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments