Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சருக்கு அமலாக்கத்துறை சம்மன்.. நவம்பர் 2ம் தேதி ஆஜராக உத்தரவு..!

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2023 (07:53 IST)
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதிய மதுபான கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இதில் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தது.

அதில் டெல்லியின் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா முறைகேடு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு சில மாதங்கள் ஆகியும் அவருக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றும் ஜாமீன் கிடைக்கவில்லை.  

இந்த நிலையில் துணை முதல்வரை அடுத்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. டெல்லியின் புதிய மதுபானை கொள்கை வழக்கு தொடர்பாக நவம்பர் இரண்டாம் தேதி முதலமைச்சர் அரவிந்த் கெஜரால் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று இந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்மனை ஏற்று அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர் ஆவாரா? அவரும் கைது செய்யப்படுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments