Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோல்ஸ் ராய்ஸ் உள்பட நீரவ் மோடியின் 9 கார்கள் பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி

Webdunia
வியாழன், 22 பிப்ரவரி 2018 (12:33 IST)
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11500 கோடி மோசடியாக கடன் பெற்று நாட்டை விட்டு தப்பி சென்றுவிட்ட வைரவியாபாரி நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ.5000 கோடி மதிப்புள்ள நகைகள் உள்பட சொத்துக்களை ஏற்கனவே சிபிஐ முடக்கியுள்ளது.

இந்த நிலையில் நீரவ் மோடிக்கு சொந்தமான 9 கார்களை இன்று அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. இவற்றில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், மெர்சிடீஸ் பென்ஸ் ஜிஎல் 350 சிடிஐ, போர்சே,, பனாமேரா, ஹோண்டா மற்றும் டொயோடா ஃபார்சூனர், டொயோடா இனோவா ஆகிய கார்களும் அடங்கும்.

பறிமுதல் செய்யப்பட்ட இந்த 9  கார்களும் மதிப்பிடப்பட்டு வருவதாகவும், இன்னும் நீரவ் மோடிக்கும் இருக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமலாக்கத்துறை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments