ரோல்ஸ் ராய்ஸ் உள்பட நீரவ் மோடியின் 9 கார்கள் பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி

Webdunia
வியாழன், 22 பிப்ரவரி 2018 (12:33 IST)
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11500 கோடி மோசடியாக கடன் பெற்று நாட்டை விட்டு தப்பி சென்றுவிட்ட வைரவியாபாரி நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ.5000 கோடி மதிப்புள்ள நகைகள் உள்பட சொத்துக்களை ஏற்கனவே சிபிஐ முடக்கியுள்ளது.

இந்த நிலையில் நீரவ் மோடிக்கு சொந்தமான 9 கார்களை இன்று அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. இவற்றில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், மெர்சிடீஸ் பென்ஸ் ஜிஎல் 350 சிடிஐ, போர்சே,, பனாமேரா, ஹோண்டா மற்றும் டொயோடா ஃபார்சூனர், டொயோடா இனோவா ஆகிய கார்களும் அடங்கும்.

பறிமுதல் செய்யப்பட்ட இந்த 9  கார்களும் மதிப்பிடப்பட்டு வருவதாகவும், இன்னும் நீரவ் மோடிக்கும் இருக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமலாக்கத்துறை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாதவிடாயை நிரூபிக்க சானிட்டரி நாப்கின்களை காட்டு.. அடாவடி செய்த 2 மேற்பார்வையாளர்கள் மீது வழக்கு!

மேயர் மற்றும் மேயரின் கணவர் இரட்டை கொலை வழக்கு: 5 பேருக்குத் தூக்கு தண்டனை!

மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப்.. HP, Dell, மற்றும் Acer நிறுவனங்களுடன் ஒப்பந்தம்..!

ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற மகனை கொலை செய்த தாய்.. கள்ளக்காதலனும் உடந்தை..!

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசியல் கட்சி பிரமுகர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments