Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் மல்லையா நாடு கடத்தப்படுவாரா? - இண்டர்போலிடம் விவரங்கள் ஒப்படைப்பு

விஜய் மல்லையா நாடு கடத்தப்படுவாரா? - இண்டர்போலிடம் விவரங்கள் ஒப்படைப்பு
, திங்கள், 13 ஜூன் 2016 (11:01 IST)
மல்லையா தொடர்பாக இண்டர்போல் கோரிய விவரங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை அமலாக்கத்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.
 

 
பண மோசடி மற்றும் கடன் சர்ச்சையில் சிக்கியுள்ள சாராய வியாபாரி விஜய் மல்லையா லண்டனில் பதுங்கி உள்ளார். அவரை நாடு கடத்தும்படி இந்தியா சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க இங்கிலாந்து அரசு மறுத்துவிட்டது.
 
இதனையடுத்து அவரைப் பிடித்து தரும்படி சர்வதேச காவல்துறையிடம் (இண்டர்போல்) அமலாக்கத்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதனை ஏற்க மறுத்த அவர்கள், மல்லையா தொடர்பான பல விவரங்களை கேட்டனர்.
 
இந்நிலையில், மல்லையா தொடர்பாக இண்டர்போல் கோரிய விவரங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை அமலாக்கத்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.
 
ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிப்பதற்கான அனைத்து வழிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளதாகவும், இந்திய வங்கிகளுக்கு நிவாரணம் கிடைக்க மல்லையாவை பிடித்து தர வேண்டும் எனவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது. தேர்தலில்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வரார்! வரார்! சன்னி லியோன் சென்னை வரார்!