Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவுதம் காம்பீர் மீது வழக்குப்பதிவு செய்த தேர்தல் ஆணையம்!

கவுதம் காம்பீர்
Webdunia
சனி, 27 ஏப்ரல் 2019 (19:29 IST)
சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் கிழக்கு டெல்லி தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் கடந்த சில நாட்களாக தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்
 
இந்த நிலையில் தேர்தல் விதிமுறையை மீறியதாக கவுதம் காம்பீர் மீது தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. கிழக்கு டெல்லி தொகுதியிலுள்ள ஜன்ங்புரா என்னும் பகுதியில், கடந்த 25ஆம் தேதி பாஜக சார்பில் தேர்தல் பேரணி ஒன்று நடைபெற்றது. இந்த பேரணிக்கு கவுதம் காம்பீர் உரிய முன் அனுமதியை பெறவில்லை என கூறப்படுகிறது.
 
இதையடுத்து, தேர்தல் ஆணையத்திடம் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கவனத்துக்கு கொண்டு வந்த நிலையில், காம்பிர் மீது வழக்குப்பதிவு செய்த தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. இதனையடுத்து டெல்லி காவல்துறை, இது தொடர்பாக வழக்குப்ப்திவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments