Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேபாளம், சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சென்னையிலும் உணரப்பட்டது

Webdunia
செவ்வாய், 12 மே 2015 (13:28 IST)
நேபாளம் மற்றும் சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகளில் 7 ஐ தாண்டியுள்ளது. இது சென்னையிலும் உணரப்பட்டது.
 
இன்று மதியம் 12.35 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நேபாளத்தில் ரிக்டர் அளவுகளில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளது. சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.4 ஆகப் பதிவாகியுள்ளது.
 
இந்த நிலநடுக்கத்தால் சேதம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் பயங்கர சேதத்தை சந்தித்த நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலநடுக்கம் டெல்லி, பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் சென்னையில் கோடம்பாக்கம் உள்ளிட்ட சில இடங்களிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மேலும், இந்த நிலநடுக்கம் உலகம் முழுவதும் 82 இடங்களில் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments