Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நேபாளம், சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சென்னையிலும் உணரப்பட்டது

நேபாளம், சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சென்னையிலும் உணரப்பட்டது
, செவ்வாய், 12 மே 2015 (13:28 IST)
நேபாளம் மற்றும் சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகளில் 7 ஐ தாண்டியுள்ளது. இது சென்னையிலும் உணரப்பட்டது.
 
இன்று மதியம் 12.35 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நேபாளத்தில் ரிக்டர் அளவுகளில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளது. சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.4 ஆகப் பதிவாகியுள்ளது.
 
இந்த நிலநடுக்கத்தால் சேதம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் பயங்கர சேதத்தை சந்தித்த நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலநடுக்கம் டெல்லி, பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் சென்னையில் கோடம்பாக்கம் உள்ளிட்ட சில இடங்களிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மேலும், இந்த நிலநடுக்கம் உலகம் முழுவதும் 82 இடங்களில் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil