Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்தமானில் திடீர் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையா?

Webdunia
திங்கள், 13 ஜூலை 2020 (07:37 IST)
உலகில் ஒருசில நாட்களுக்கு ஒருமுறை நிலநடுக்கங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று அதிகாலை இந்தியாவின் அந்தமான் தீவுகளில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
அந்தமான் தீவுகளில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் என்ற அளவில் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களிலும் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு தெரிந்ததாகவும் இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வீடுகளை விட்டு வெளியே வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
அந்தமான் நிக்கோபார் தீவு பகுதியில் உள்ள டிகலிப்பூர் என்ற பகுதியில் தான் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 4.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பெரிய அளவில் எந்த சேதமும் இல்லை என்று முதல்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது
 
அதேபோல் சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை என்றும் இதனால் பொதுமக்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கம் இந்தியாவில் மட்டுமின்றி மியான்மர் உள்ளிட்ட சில நாடுகளிலும் உணரப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments