Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் இ - சிகரெட்டுக்கு தடை : மத்திய அரசு அதிரடி

Webdunia
புதன், 18 செப்டம்பர் 2019 (16:19 IST)
உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் போதைப் பொருளான இ - சிகரெட்டுக்கு தடைவிதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இ -  சிகரெட்டுக்கு தடை விதித்து மத்திய அமைச்சர் உத்தரவிட்டார்.
இ - சிகரெட்டை தடை செய்வதற்கான அவசரச் சட்டம் மத்திய அமைச்சரவை குழுவால் ஆய்வு செய்யப்பட்டது. இந்த சட்டத்தின் அடிப்படையில் இ - சிகரெட் தடையை மீறுபவர்களுக்கு ஒருவருடம் சிறைத் தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிக்கப்பட்டுள்ளது.
 
நாடு முழுவதும் இ - சிகரெட்டுக்கு இன்று மத்திய அரசு தடைவிதித்துள்ளது. மேலும், இ - சிகரெட் உற்பத்தி ஏற்றுமதி, இறக்குமதி, விற்பனை, அதை விளம்பரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments