Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் இ - சிகரெட்டுக்கு தடை : மத்திய அரசு அதிரடி

Webdunia
புதன், 18 செப்டம்பர் 2019 (16:19 IST)
உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் போதைப் பொருளான இ - சிகரெட்டுக்கு தடைவிதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இ -  சிகரெட்டுக்கு தடை விதித்து மத்திய அமைச்சர் உத்தரவிட்டார்.
இ - சிகரெட்டை தடை செய்வதற்கான அவசரச் சட்டம் மத்திய அமைச்சரவை குழுவால் ஆய்வு செய்யப்பட்டது. இந்த சட்டத்தின் அடிப்படையில் இ - சிகரெட் தடையை மீறுபவர்களுக்கு ஒருவருடம் சிறைத் தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிக்கப்பட்டுள்ளது.
 
நாடு முழுவதும் இ - சிகரெட்டுக்கு இன்று மத்திய அரசு தடைவிதித்துள்ளது. மேலும், இ - சிகரெட் உற்பத்தி ஏற்றுமதி, இறக்குமதி, விற்பனை, அதை விளம்பரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments