Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரம்ப் கையெழுத்தால் இந்திய ஐடி ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2017 (15:57 IST)
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்-1பி விசா விதிமுறையில் மாற்றங்களை கொண்டு வந்ததால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  


 

 
டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் அதிரபாக பதவியேற்றவுடன் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்தார். அதில் முக்கியாமான ஒன்று, அமெரிக்கா குடிமக்களை அனைத்து துறைகளிலும் பணியில் அமர்த்துவது. 
 
இதற்காக எச்-1பி விசா விதிமுறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. இந்திய ஐடி நிறுவனங்கள், எச்-1பி விசா மூலம் இந்திய பொறியாளர்களை அமெரிக்காவிற்கு அனுப்பி குறைந்த செலவில் அதிகளவிலான லாபத்தைப் பெற்று வந்தது. இந்திய ஐடி சந்தைக்கு மிகமுக்கியமான வர்த்தகத் தளம் அமெரிக்கா.
 
தற்போது எச்-1பி விசா பெறும் ஒருவரின் அடிப்படை சம்பளம் குறைந்தபட்சம் 1,30,000 அமெரிக்க டாலராக இருக்க வேண்டும். இந்த விசா பிரச்சனையில் இருந்து விடுப்பட இந்திய ஐடி நிறுவனங்கள் அனைத்தும் தற்போது அமெரிக்க மக்களையும், அமெரிக்க கல்லூரிகளில் இருந்து வெளிவரும் மாணவர்களையும் பணியில் அமர்த்தும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
 
இதனால் இந்திய ஐடி நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை காத்துக்கொண்டாலும், லாபத்தை இழக்கும். இதனால் பல ஊழியர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.
 
இந்நிலையில் விசா கட்டுப்பாடுகள் குறித்து நாஸ்காம் மற்றும் மத்திய அரசு தொடர்ந்து அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments