Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் இல்லத்தின் மேல் திடிரென பறந்த டிரோன்: டெல்லியில் பரபரப்பு

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (11:52 IST)
இன்று அதிகாலை 5.30 மணி அளவில் திடீரென பிரதமர் மோடி இல்லத்தின் மேல் ட்ரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் 24 மணி நேரமும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் இன்று அதிகாலை 5.30 அளவில் மர்மமான ட்ரோன் ஒன்று பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
விமானங்கள் கூட பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள இந்த பகுதியில் அனுமதி இன்றி ட்ரோன் பறந்ததால் பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர் 
இதனை அடுத்து ட்ரோன் பறந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி போலீசார்  தெரிவித்துள்ளனர். தற்போது வரை அந்த ட்ரோனை இயக்கியது யார் என்று கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் இது அயல்நாட்டு சதியா என்பது குறித்த விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
அதிகாலையில் திடீரென பிரதமர் மோடியின் இல்லத்தின் மேல் டோன் பறந்ததால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதவியேற்ற மறுநாளே சிக்கல்.. ஹேமந்த் சோரன் முதல்வர் பதவி தப்புமா?

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்..! இந்திய வீரர்கள் 4-பேர் வீர மரணம்.!!

கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது: அண்ணாமலை

ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. முப்படைகள் வரவேற்பு.. புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments