Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி தென்னிந்தியா USSI என்று அழைக்கப்படுமாம்! துண்டாகிறதா இந்தியா?

Webdunia
செவ்வாய், 30 மே 2017 (22:57 IST)
சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த மாட்டிறைச்சி தடை சட்டம் ஒரு வகை தென்னிந்தியர்களை ஒன்று சேர்த்துவிட்டது என்றே கூற வேண்டும். தமிழகம், கேரளா, கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களும் பல்வேறு பிரச்சனைகளில் கருத்துவேறுபாடுடன் இருந்த நிலையில் மாட்டிறைச்சி விவகாரம் தென்னிந்திய மாநிலங்களை ஒன்றிணைத்துவிட்டது.



 


அதற்கு சான்றாக 'திராவிட நாடு' என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் பலமணி நேரமாக இந்திய அளவில் டிரெண்ட் ஆகி மத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துவிட்டது.

மேலும் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடும் விதமாக திமுக  எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் இதுகுறித்து கூறியபோது, 'திராவிடநாடு என்ற வார்த்தை டுவிட்டரில் டிரெண்டிங் ஆவதை பாஜக சாதாரண விசயமாகக் கருதக்கூடாது. இது வெறும் தொடக்கம்தான். மதவாத கருத்துகளையும், இந்துத்துவா சிந்தனைகளையும் அமல்படுத்துவதை பாஜக இனி கைவிட வேண்டும். அதற்கான எச்சரிக்கையே திராவிட நாடு டிரெண்டிங்,’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது போதாதென்று கடந்த சில நிமிடங்களாக தென்னிந்தியாவை ஒன்றிணைத்து இனிமேல் USSI என்று அழைப்போம் என்றும் இதற்கு  ’யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் சௌத் இந்தியா’  என்று பொருள் என்றும் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது. மாட்டிறைச்சி தடை சட்டத்தை திரும்ப பெற்று இந்தியா துண்டாகாமல் தடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்று நடுநிலையாளர்கள் கூறி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

கணவர் இறந்தது தெரியாமல் 5 நாட்களாக ஒரே வீட்டில் வசித்த மனைவி.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments