Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரின் சுதந்திர தின உரையை ஒளிபரப்ப மறுத்த தூர்தர்சன்

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2017 (18:40 IST)
திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்காரின் சுதந்திர தின உரையை தூர்தர்சன் ஒளிபரப்ப மறுப்பு தெரிவித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

 
நாடு முழுவதும் நேற்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அரசு தொலைக்காட்சி சேனலான தூர்தர்சன் திரிபுரா முதல்வரின் 6 நிமிட உரையை காலை 6.30 மணிக்கு ஒளிபரப்புவதாக இருந்தது. இந்நிலையில் முதல்வரின் உரையில் சில திருத்தங்கள் செய்து மீண்டும் அனுப்புமாறு மாநில அரசுக்கு தூர்தர்சன் கேட்டுக்கொண்டது.
 
இதற்கு திரிபுரா அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது. இதையடுத்து திரிபுரா முதல்வரின் உரையை தூர்தர்சன் ஒளிபரப்பவில்லை. இதற்கு மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஒரு மாநில முதல்வரின் உரையை ஒளிபரப்ப மறுப்பு தெரிவித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநில முதல்வர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments