Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாய் கடித்ததால் நாய் ஓனரை கட்டையால் அடித்து நொறுக்கிய எதிர்வீட்டினர்.. அதிர்ச்சி தகவல்..!

Siva
வியாழன், 16 மே 2024 (14:42 IST)
ஹைதராபாத்தில் நாய் கடித்ததால் நாயின் ஓனரை எதிர் வீட்டில் உள்ளவர்கள் மரக்கட்டையால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்கள் ஆகவே தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் கடிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது என்பதும் இதனை அடுத்து நாய் கடித்தால் அந்த நாயின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஐதராபாத்தில் ஸ்ரீநாத் என்பவர் வெளிநாட்டு ரக நாயை வளர்த்து வந்த நிலையில் அந்த நாய் அடிக்கடி எதிர் வீட்டுக்கு சென்று அவர்களை கடித்து வருவதாக கூறப்பட்டது. எதிர் வீட்டில் உள்ளவர்கள் நாயை கட்டி போடும்படி கூறியும் அந்த நாயின் உரிமையாளர் கேட்கவில்லை என்பதை அடுத்து நேற்று திடீரென மீண்டும் நாய் கடிக்க வந்தது.

இதனால் ஆத்திரமடைந்த எதிர்வீட்டினர் நாயின் ஓனரையும் நாயையும் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து படுகாயம் அடைந்த நாய் மற்றும் நாயின் ஓனரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments