Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஜமானரை காப்பாற்ற புலியுடன் மோதி உயிரை விட்ட நாய்

Webdunia
திங்கள், 6 ஜூன் 2016 (13:31 IST)
உத்தரபிரதேச மாநிலம் குதார் நகரம்  அருகேயுள்ள பர்பத்பூர் கிராமத்தில் வசிப்பவர் குர்தேவ்சிங். இவர் ஜாக்கி என்ற நாய் குட்டி ஒன்றை செல்லமாக வளர்த்துவந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று இவரது கிராமத்தின் அருகே உள்ள துக்வா தேசிய பூங்கா வனச் சரணாலயத்திலிருந்து தப்பி புலி ஒன்று ஊருக்குள் வந்தது. அப்போது வீட்டு வாசலில் கட்டிலில் அவர் உறங்கி கொண்டிருந்தார். அவரது வளர்ப்பு நாய் அருகில் படுத்திருந்தது.



கிராமத்தில் புகுந்த புலி குர்தேவ் சிங்கை தாக்க வந்தது. அதை அறிந்த நாய் ஜாக்கி சத்தம்  கேட்டு குரைத்தது. உடனே சுதாரித்துக்  கொண்ட  குர்தேவ்சிங் கண் விழித்து எழுந்தார். அப்போது புலி நாயின் மீது பாய்ந்து தாக்கியது. நாயும் புலியுடன் சண்டை போட்டது. சிறிது நேரத்தில் நாயும்,புலியும் காணாமல்

இதையடுத்து குர்தேவ் சிங் நாயை தேடிச் சென்றபோது சிறிது தூரத்தில் நாய் ஜாக்கி இறந்து கிடந்தது. தனது எஜமானரை காப்பாற்ற புலியுடன்  சண்டையிட்டு தனது இன்னுயிரை இழந்த ஜாக்கியின்  விசுவாசத்தை குர்தேவ்சிங்கும் அவரது உறவினர்களும் கண்ணீருடன் அதன் உடலை அடக்கம் செய்தனர்.

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்
Show comments