Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறந்த தாயின் உடலுடன் 3 நாட்கள் இருந்த டாக்டர் !

Webdunia
வியாழன், 18 ஜூன் 2020 (22:45 IST)
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் செர்புழச்சேரியில் வசித்து வந்தவர் ஓமனா (72). இவர் தனது மகள் கவிதாவுடன் (43) வீட்டில் தனியே வசித்து வந்தார்.

ஓமனா தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மகள் கவிதா ஓமியோபதி டாக்டராக இருந்து வருகிறார். இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக ஓமனா சில நாட்களுக்கு முன் இறந்துவிட்டார்.

ஆனால், தாயின் இறப்பு குறித்து யாருக்கும் தெரியப்படுத்தாமல் அவர் மீண்டு எழுந்து வருவார் என்று பிணத்துடன் இருந்துவிட்டார்.

இந்நிலையில் அக்கம் பக்கத்தில் துர்நாற்றம் வீசவே அவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் ஓமனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
 
கவிதாவிடம் இதுகுறித்து விசாரித்ததற்கு அவர் மீண்டும் எழுந்து வருவார் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் கவிதாவிடம் மேலும் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments