Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறந்த தாயின் உடலுடன் 3 நாட்கள் இருந்த டாக்டர் !

Webdunia
வியாழன், 18 ஜூன் 2020 (22:45 IST)
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் செர்புழச்சேரியில் வசித்து வந்தவர் ஓமனா (72). இவர் தனது மகள் கவிதாவுடன் (43) வீட்டில் தனியே வசித்து வந்தார்.

ஓமனா தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மகள் கவிதா ஓமியோபதி டாக்டராக இருந்து வருகிறார். இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக ஓமனா சில நாட்களுக்கு முன் இறந்துவிட்டார்.

ஆனால், தாயின் இறப்பு குறித்து யாருக்கும் தெரியப்படுத்தாமல் அவர் மீண்டு எழுந்து வருவார் என்று பிணத்துடன் இருந்துவிட்டார்.

இந்நிலையில் அக்கம் பக்கத்தில் துர்நாற்றம் வீசவே அவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் ஓமனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
 
கவிதாவிடம் இதுகுறித்து விசாரித்ததற்கு அவர் மீண்டும் எழுந்து வருவார் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் கவிதாவிடம் மேலும் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments