Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை.. அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran
வியாழன், 16 மே 2024 (15:56 IST)
கேரள மாநிலம் கோழிக்கோடு என்ற பகுதியில் கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிறுமி ஒருவருக்கு கையின் ஆறாவது விரலை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய அவரது பெற்றோர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 4 வயது சிறுமிக்கு நாக்கில் அடியில் அதிக சதை இருப்பதை பார்த்த மருத்துவர் அதை அறுவை சிகிச்சை செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் பெற்றோர் ஒப்புதல் இன்றி அவர் நாக்கில் அறுவை சிகிச்சை செய்துள்ளதால் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அறுவை சிகிச்சை செய்த டாக்டரிடம் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கைவிரலில் அறுவை சிகிச்சையை அவர் முறைப்படி செய்ததாகவும் கூடுதலாக அவர் பெற்றோரிடம் அனுமதி கேட்காமல் நாக்கில்  அறுவை சிகிச்சை செய்ததால் விசாரணை உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments