Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிகிச்சைக்கு வந்த பெண்ணை ஆபாச படம் எடுத்த மருத்துவர் கைது

சிகிச்சைக்கு வந்த பெண்ணை ஆபாச படம் எடுத்த மருத்துவர் கைது

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2016 (16:33 IST)
வயிற்று வலி என சிகிச்சைக்கு வந்த பெண்ணை, செல்போன் மூலம் ஆபாச படம் எடுத்த மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.


 

 
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி மாவட்டத்தில் உள்ள பஜார்தியா என்ற பகுதியை சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அதே பகுதியில் உள்ள ஒரு மருத்துவரிடம் சென்றார்.
 
அப்பெண்ணை சோதித்த மருத்துவர், ஒரு களிம்பை கொடுத்து, பக்கத்தில் உள்ள அறைக்கு சென்று, அதை வயிற்றில் தடவி விட்டு வரும்படி கூறியுள்ளார். அப்பெண்ணும் அங்கு சென்று களிம்பை தடவியுள்ளார். அப்போது அந்த அறையின் கூறைப்பகுதியில், ஒரு செல்போன் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
 
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், அந்த செல்போனை எடுத்துக் கொண்டு காவல் நிலையம் சென்று புகார் அளித்தார். 
 
போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments