Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொலை செய்யப்பட்ட டெல்லி டாக்டர்... விசாரணையில் திடுக் தகவல்..!

Mahendran
வெள்ளி, 4 அக்டோபர் 2024 (14:21 IST)
டெல்லியில் டாக்டர் கொலை செய்யப்பட்ட நிலையில், அந்த டாக்டர் நர்சுடன் தொடர்பில் இருந்ததாக நர்சின் கணவர் சந்தேகித்ததாகவும், இதைத் தொடர்ந்து சிறுவர்களை பயன்படுத்தி அந்த டாக்டரை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் நேற்று, டாக்டர் ஜாவேத் என்பவரை இரண்டு சிறுவர்கள் சுட்டுக் கொன்றதாக கூறப்படும் நிலையில், அதில் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். அவரிடம் விசாரணை நடத்திய போது, டாக்டர் ஜாவேத் அதே மருத்துவமனையில் பணிபுரியும் நர்சுடன் தொடர்பில் இருந்ததாகவும், நர்சின் கணவர் இதைக் குறித்து சந்தேகப்பட்டதாகவும், நர்சின் மகளை காதலித்து வந்த சிறுவனிடம், “டாக்டர் ஜாவேதைப் சுட்டுக் கொன்றால், உனக்கு மகளை திருமணம் செய்து வைப்பேன்” என்று நர்சின் கணவர் வாக்குறுதி அளித்ததால், அந்த சிறுவன் டாக்டரை சுட்டுக் கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார் என கூறப்படுகிறது.

மேலும், அந்த சிறுவனுக்கு நர்சின் கணவர் பணம் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நர்சின் கணவரை அடுத்த கட்டமாக விசாரணை செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
<>

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது பா.ஜ.க.வின் கடமை - நெல்லையில் அண்ணாமலை உரை

அமித்ஷா முன்னிலையில் பாஜகவுக்கு தாவிய திமுக பிரபலம்! - தொண்டர்கள் அதிர்ச்சி!

அங்கிள் என கூறிய விஜய்.. அண்ணாச்சி என கூறிய நயினார் நாகேந்திரன்.. திமுகவினர் ஆத்திரம்..!

உதயநிதி முதல்வராகவும் முடியாது.. ராகுல் காந்தி பிரதமராகவும் முடியாது: அமித்ஷா

கல்வி உதவித்தொகை என்ற பெயரில் புதிய மோசடி: UPI மூலம் பணத்தை இழந்த மாணவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments