பீகார் சட்ட மன்றத் தேர்தல் வெற்றியை மனதில் வைத்துக் கொண்டு, நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கக் கூடாது என்று வெங்கைய்யா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நியூ டெல்லியில், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் 26 ஆம் தேதி முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அப்போது,நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கைய்யாநாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பீகார் சட்ட மன்ற தேர்தல் முடிவுகள், அம்மாநில மக்களின் விருப்பத்தை மட்டுமே பிரதிபலித்துள்ளது. இது ஒட்டுமொத்த இந்திய மக்களின் கருத்து அல்ல. எனவே, இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு, நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கக் கூடாது. அவ்வாரு செய்வது ஜனநாயகம் கிடையாது. ஜனநாயகம் தலைக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி
திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!
மனைவியை குழி தோண்டி புதைத்த கணவர்.! வீடியோ கால் பேசியதால் கொலை.!!
நிலம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்ய வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதா
பாலியல் புகார்..!மருத்துவமனைக்குள் சென்ற காவல் வாகனம்..! நோயாளிகள் அதிர்ச்சி..!!