Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

​நாடாளுமன்ற முட்டுக்கட்டைக்கு தீர்வு காணும் மத்திய அரசின் முயற்சி தோல்வி

​நாடாளுமன்ற முட்டுக்கட்டைக்கு தீர்வு காணும் மத்திய அரசின் முயற்சி தோல்வி
, திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (15:38 IST)
நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டம் தோல்வியில் முடிந்தது.
 

 
முறைகேடு சர்ச்சைகளில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், ஸ்மிருதி இரானி, ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜே, மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
 
இதனால் இரு அவைகளிலும் அலுவல்கள் முடங்கியுள்ள நிலையில், நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
 
இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற முட்டுக்கட்டைக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் சுஷ்மா பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை நடத்தவிடப் போவதில்லை என காங்கிரஸ் திட்டவட்டமாக தெரிவித்தததால், கூட்டம் தோல்வியில் முடிந்தது. இதனால் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil