Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரனுக்கு ஜாமீன் மறுப்பு: 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி!

தினகரனுக்கு ஜாமீன் மறுப்பு: 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி!

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2017 (15:59 IST)
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தினகரனுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது. மேலும் அவரை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


 
 
தேர்தல் ஆணையத்துக்கு இடைத்தரகர் மூலம் லஞ்சம் கொடுத்து முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை தங்கள் தரப்புக்கு பெற முயன்ற வழக்கில் அதிமுக அம்மா அணியை சேர்ந்த டிடிவி தினகரன் விசாரணைக்கு டெல்லிக்கு அழைக்கப்பட்டார். தொடர்ந்து நான்கு நாட்கள் அவரிடம் விசாரணை நடத்திய டெல்லி போலீஸ் அவரை நேற்று இரவு கைது செய்தனர்.
 
இதனையடுத்து டெல்லி குற்றப்பிரிவு போலீசார் இன்று தினகரனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். தினகரனுடன் சேர்ந்து அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது தினகரன் தரப்பில் ஜாமீன் வழங்க மனுதாக்கல் செய்யப்பட்டது.
 
காவல்துறையினர் தங்களை துன்புறுத்துவதாக தினகரன் தரப்பினர் வாதாடியதாக கூறப்படுகிறது. இதனை நிராகரித்த நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் தினகரன் தரப்பை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கோரிக்கை வைத்தனர்.
 
இதனையும் ஏற்காத நீதிபதி 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். தினகரனை சென்னை, கொச்சி, பெங்களுர் அழைத்து சென்று விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments